டெல்லி || ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர், காவல்துறையினர் விசாரணை? - Seithipunal
Seithipunal


கல்லூரி மானவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, திமர்பூர் பகுதியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் இருந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்த மாணவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த மாணவர் ரஜத் என்பது தெரியவந்தது.  இவர் குடும்பத்தினருடன் காரவால் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். ரஜத் படித்துக் கொண்டே, கரோல் பாக்கில் வேலை செய்துள்ளார். 

வேலைமுடிந்து வீட்டிற்கு வரும் போது அவர் ஆற்றில் குதித்தது தெரியவந்தது. இதையடுத்து டைவர்ஸ் உடனடியாக தண்ணீரில் குதித்து ரஜத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்தார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Committed Suicide in Delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->