22-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனை, வீரர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், உலகம் முழுதும் 72 நாடுகள் பங்கேற்கும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி  கோலாகலமாக நடைந்து வருகின்றது.  நேற்று முன் தினம் இதன் துவக்க விலா நடந்து முடிந்த நிலையில், 2-ஆம் நாளான நேற்று பல விளையாட்டு போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன

இதில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஒரேநாளில் இந்தியா தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள், வெண்கல பதக்கங்கள் உள்ளிட்ட 4 பதக்கங்களை வென்றது. இதில் கலந்துகொண்ட பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

இத்தகைய நிலையில், காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர், "பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, சங்கத் மகாதேவ் சர்க்கார் ,பிந்த்யாராணி தேவி, குருராஜ் பூஜாரி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

 பளுதூக்கும் வீரர்கள் தங்கள் அபார முயற்சியால் பதக்கப் பட்டியலில் இந்தியாவை தூக்கி நிறுத்தினர். காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin about 22th common wealth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->