ஸ்ரீசைலம் நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் தீவிபத்து.. 9 பேரின் கதி என்ன?.. கண்ணீரில் உறவினர்கள்.!!
Srisailam Power Generation Plant Fire Accident
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்கர்நூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் ஸ்ரீசைலம் அணை இருக்கிறது. இந்த அணையின் நிலத்திற்கு அடியில் இருந்தே நீர்மின் நிலைய மின் உபகரணங்களில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்து ஏற்பட்டதும், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெளியாகியுள்ள வீடியோவின் படி, தீ ஏற்பட்டதும், அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், அது பலனளிக்காமல் தீ தொடர்ந்து வேகமெடுத்து பரவியது. அப்பகுதியில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவித்த நிலையில், 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீ சைலம் மருத்துவமனைக்கு மீட்பு படையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், எஞ்சியுள்ள 9 பேரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Srisailam Power Generation Plant Fire Accident