சிவாஜிக்கு பின்னர், அந்த புகழ் எஸ்.பி.பிக்கு தான்.! பல வருடத்திற்கு பின்னர் சோகத்திலும் நெகிழ்ச்சி.!
SPB GOT RESPECT AFTER SIVAJI GANESAN
நேற்று, தமிழக அரசு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இதனால், தமிழக காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்கிய பின்னர் மரியாதை செலுத்தி அதன் பின்னர் பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக, இதுபோல காவல்துறை மரியாதையுடன் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய இருக்கின்றது.
மேலும் கர்நாடக அரசும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு மரியாதை தெரிவிக்கும் படி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அரசு கட்டிடங்களில் இருக்கும் தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஐபிஎல்சிஎஸ்கே வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து அவருக்காக துக்கம் அனுசரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SPB GOT RESPECT AFTER SIVAJI GANESAN