தந்தையின் விபரீத ஆசை., சிலையுடன் மகன் செய்த காரியம்.! ஷாக் ஆன ஊர்மக்கள்.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒருவர் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக சிலையை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பைத்பூர் பகுதியைச் சேர்ந்த சிவ மோகன் பால் என்பவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு மூன்று மகள்களும், ஒன்பது மகன்களும் இருக்கின்றனர். இவரது எட்டாவது மகன் பஞ்ச் ராஜாவை தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. 

அவருக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் திருமணம் செய்யவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை, "எனது மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றான். சிறிய வேலைகளுக்கு கூட பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலையில், அவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நான் வீணாக்க விரும்பவில்லை. 

அதுபோல என்னுடைய குடும்பத்தில் இவன் திருமணமாகாமல் இருப்பதும் என்னால் தாங்க இயலவில்லை. எனவே, அவனுக்கு பூசாரிகளின் அறிவுரைப்படி சிலையுடன் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தேன். 

இதை கூறிய பொழுது என் மகன் என்னுடைய மகிழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டான். மற்ற பிள்ளைகளுக்கு எப்படி திருமணம் நடந்ததுபோலவே சீரும், சிறப்புமாக திருமணத்தையும் நடத்தி முடித்தோம்." என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son married statue because of dad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->