தொடர் குண்டுவெடிப்பால் விதிக்கப்பட்ட தடை நீக்கம்.! இலங்கை அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 21–ந் தேதி  ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. அப்பொழுது அங்கு திடீர் குண்டுவெடிப்பு  நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

அதில் இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமான பேர் பலியானர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழலே நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதாலும், அதுகுறித்த வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்ததாலும்  மக்கள் நாள்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வரும்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கில் இலங்கையில் சமூக வலைதளங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் 1 வாரங்களுக்கு  பிறகு இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது மேலும் இந்த உத்தரவை  இலங்கை அதிபர் பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social network ban removed in srilanka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->