உறியடி அடித்தவரின் தலையிலேயே விழுந்து உடைந்த பானை.. விளையாட்டு போட்டியில் சம்பவம்.!
Social Media Video Trending 1 September 2021
பண்டிகை காலங்களில் ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது, அதில் நடைபெறும் விளையாட்டுகளுக்கும், அதனால் வரும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இருக்காது. ஒருபுறம் விளையாட்டுகள் நடக்க, மற்றொருபுறம் சிறிதளவு கோஷ்டி மோதல், வாக்குவாதம் நடக்கும்.
எது நடந்தாலும் அதனை வேடிக்கை பார்ப்பதும், சண்டையில் சட்டை கிழிந்து, டவுசர் கிழிந்து வரும் நபர்களை பார்க்கவும், பெண்களிடம் வீரத்தை காண்பிப்பதாக சண்டைக்கு முந்தி சென்றவர் சட்டையில் ஏற்பட்ட கிழியை மறைத்து வந்து பல்பு வாங்குவது என ஒவ்வொரு சம்பவமும் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும்.
சில நேரங்களில் நாம் வழக்கமாக விளையாடும் விளையாட்டுகளில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படும். தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை.
இந்த வீடியோவில், " உறியடியில் கலந்துகொண்ட நபர் மேலே கட்டப்பட்டுள்ள பானையை உடைக்க முயற்சிக்கிறார். பானைக்குள் தண்ணீர் இருக்கும் நிலையில், குறித்த நபர் பானையை ஓங்கி அடிக்கையில், பானை சிதறி உடையாமல் கயிற்றின் மீது பலத்த அடி விழுந்து, பானை அவரது தலையிலேயே விழுந்துவிடுகிறது".
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை சுதாரித்து பிடித்து கொள்கின்றனர். இது குறித்த வீடியோ நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டும், அனுதாபத்தை ஏற்படுத்துவது போன்றும் வைரலாகி வருகிறது.
English Summary
Social Media Video Trending 1 September 2021