பீகார்: சமூக ஆர்வலர் எரித்து கொலை.. குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறை..!
Social activist burnt to death in Bihar
சமூக ஆர்வலர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் மாநிலம், மதுபானி மாவட்டம், பெனிபேட்டி பகுதியை சேர்ந்தவர் புத்திநாத் ஜா. இவர் பத்திரிகையாளராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். அந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை அம்பலபடுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆஸ்பத்திரியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக முகநூலில் தகவல் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்ற அவரை காணவில்லை என அவரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து கடந்த 5 நாட்களாக அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். அவரின் உடல் பெடோன் பகுதியில் உள்ள புதரில் எரிந்த நிலையில் அந்த சடலம் கண்டறியப்பட்டது. அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Social activist burnt to death in Bihar