உங்கள் படுக்கையறையில் அது இருந்தா.. உஷார்.! தம்பதிகளுக்கு, நடந்த மோசமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோழிக்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். அவரது மொபைல் போனிற்கு தினம், தினம் அவருடைய மனைவி உடைமாற்றும் நிர்வாண காட்சிகள் வீடியோக்களாக வந்துள்ளது. இதன் காரணமாக திடுக்கிட்டு அவர் உடனடியாக கோழிக்கோடு சென்றபோது அவரது மனைவி மற்றும் குடும்பத்திடம் இது குறித்து கூறியுள்ளார்.

அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்களது வீட்டு படுக்கை அறையில் யாரோ ரகசிய கேமரா வைத்து இருப்பதாக அவர்கள் சந்தேகம் கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த அறை முழுவதும் சல்லடை போட்டு தேடினர். படுக்கையறையில் ஒரு இடம் விடாமல் பரிசோதித்து பார்த்தனர். அதன் பின்னர் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

காட்சிகளின் திசையை வைத்து ஆராய்ந்தனர். பின்னர் சைபர் குற்ற பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து என்ன காரணம் என்பதை கண்டுபிடித்தனர். வெளிநாட்டில் இருந்து அந்த இளைஞர் கொண்டு வந்த ஸ்மார்ட் டிவியே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

இந்த பெண் ஒவ்வொரு நாளும் தன்னுடைய கணவருடன் அந்த டிவியின் வழியே பேசுவது வழக்கமாக இருந்துள்ளது. இருவரும் பல மணி நேரம் அந்த டிவியின் வழியே பேசுவதால், அதன் பின்னர் டிவியில் வேறு சானல்களை அவர் பார்க்க தொடங்கி விடுவார்.

ஆனால், ஆன்லைன் இணைய சேவை எப்போதும் ஆனில் இருந்துள்ளது. கேமராவின் இணைப்பை துண்டிக்கபடாத காரணமாக வீட்டின் படுக்கை அறை காட்சி அந்த இளைஞரின் செல்போனுக்கு அனுப்பி வந்துள்ளது. இதனால் தான் அவரின் நிர்வாண காட்சிகள் வெளியாகி இருக்கின்றது.

ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தி இணைய இணைப்புகளை துண்டித்து விட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற விளைவுகளும், அந்தரங்க ரகசியங்களை வெளிபடும் அச்சம் ஏற்படும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். படுக்கை அறையில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவர்கள் உஷார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smart Tv capturing bedroom photos in kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->