அரை நிர்வாண கோலத்தில் கிடந்த உடல்.! அச்சம் தரும் பகீர் உண்மைகள்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் ஒரு பத்து வயது சிறுவன் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட தான் வீட்டின் அருகே உள்ள ஒரு மாட்டு வண்டியில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சில மர்ம நபர்கள் அந்த சிறுவனை அங்குள்ள ஒரு வயல் வெளிக்கு அழைத்துச் சென்று உள்ளனர். 

பின் அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன்பின் அந்த சிறுவன் இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லி விடக் கூடும் என்று பயந்த அந்த மர்ம நபர்கள் அந்த சிறுவனை கொலை செய்து உள்ளனர். அந்த சிறுவனின் உடல் அந்த பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட சிறுவனின் உடம்பில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பிறகு அந்த சிறுவனின் உடலை காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் எதனால் கொல்லப்பட்டார் என்ற முழுவிவரம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

ஆனால் அந்த பகுதியை சார்ந்த சிலர் தான் அந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

small boy rape and killed in uttar predesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->