அசாம்.! மின்னல் தாக்கியதில் 6 பெண் தொழிலாளர்கள் காயம்.!
Six women injured in lightning strike in Assam
அசாமில் மின்னல் தாக்கியதில் 6 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
அசாம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பபோய் தேயிலைத் தோட்டம் மற்றும் மஜிலி கர் தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை தேயிலை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் 6 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பிஸ்வநாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் மூன்று பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மேலும் மூன்று பெண்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பிஸ்வநாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜோனாலி கோகோய் தெரிவித்துள்ளார்.
English Summary
Six women injured in lightning strike in Assam