இந்த வருடத்தின் புத்தாண்டு பரிசுதான் இது.. சித்தராமையா கண்டனம்.!!
siddaramaiah speech about train fare high
இந்திய இரயில்வே நிர்வாகமானது பயணிகளுக்கான இரயில் கட்டங்களை அதிரடியாக உயர்த்தி நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும்., இந்த உத்தரவு புதிய வருடம் பிறந்தது முதல் அமலாகும் என்றும் தெரிவித்திருந்தது.
இதனைப்போன்று தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றும்., இந்த உத்தரவு அமலாகும் நேரத்திற்கு பின்னர் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் என்றும் தெரிவித்தது.
மேலும், குளிர்சாதன வசதிகள் இல்லாத விரைவு இரயிலில் கிமீ 2 காசுகள் உயர்த்தப்பட்டு., குளிர்சாதன வசதியை உடைய இரயிலுக்கு கிமீ 4 காசுகள் உயர்த்தியும் அறிவித்தது.
இரண்டாம் வகுப்பு சாதாரண இரயில்., படுக்கை வசதி மற்றும் முதல்வகுப்பு பயணத்திற்கு கிமீ 1 காசு அதிகரித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரயில்வேயின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்., பயணிகள் இரயில் சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது., நமது பாரத பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுடைய புத்தாண்டு பரிசு என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
siddaramaiah speech about train fare high