பஞ்சாப்: எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்.! ஹெராயின் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் தரான் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ட்ரோன் மற்றும் இரண்டு கிலோகிராம் ஹெராயின் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று இரவு 8:56 மணியளவில், கலியா கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் ​​மஞ்சள் பாலிதீனில் சுற்றப்பட்ட 2.47 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ட்ரோனில் இருந்து சரக்குகளை விடுவிப்பதற்கான உலோக வளையமும் அதனுடன் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றொரு சுற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் உடைந்த ஆளில்லா விமானம் ஒன்று வயல்வெளியில் கிடப்பதைக் கண்டறிந்தனர்.

கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shot down Pakistan drone in border near Punjab


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->