முன்னாள் பிரதமரும், இந்நாள் பிரதமரும் ஒரே இடத்தில்.! நடந்தேறிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் நேற்று மதியம் 4 மணி அளவில் உயிரிழந்தார். இவர் சில நாட்களுக்கு முன் இருந்தே உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது இறப்பிற்குப் பின்னர் ஷீலா தீட்சித்தின் உடல் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஷீலா தீட்சித்தின் இல்லத்திலேயே வைக்கப்பட்டது, ஷீலா தீட்சித்தின் உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பல திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சென்று ஷீலா தீட்சித்தின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதுபோலவே காங்கிரஸின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், சோனியா காந்தியும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று அரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும். மேலும், ஷீலா தீட்சித்தின் மரணத்தின் காரணமாக இரண்டு நாட்களுக்கு டெல்லி அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் டெல்லி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sheela theekshith death in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->