ஓடும் காரில் பலாத்காரம்...அரை நிர்வாண கோலத்தில் ரோட்டில் வீச பட்ட கொடூரம்..! - Seithipunal
Seithipunal


ஒரிசாவில் ஓடும் காரில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில் ரோட்டில் வீசிய கொடூரமாக அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலதில்  நேற்று இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி அருகே உடை கிழிந்த நிலையில், படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் குறித்து, புவனேஸ்வரில் உள்ள கந்தகிரி பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த போது, அந்த வழியே காரில் வந்த நபர் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர், காரில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து சாலையில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி பிரதாப் கூறியதாவது:- " உண்டை கிழிந்து, ரோட்டில் வீச பட்டு கிடைக்கிற இந்த நிலையில் உடலில் படுகாயத்துடன் அந்த பெண்ணை மீட்டு உள்ளோம். 

மேலும், ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த நபர், ஒரு பகுதியில் உள்ள பிஎன் கல்லூரி அருகே வீசி சென்று உள்ளார். அந்த பெண்ணை எத்தனை பேர் பலாத்காரம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மயக்கம் தெளிந்த பின்னரே, முழு விவரம் தெரியவரும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்திருந்தார் ".


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexual harassment in running car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->