பாலியல் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பயிற்சி.. தொண்டு நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்.!!
Sex workers training to prepare mask due to Lockdown help with Voluntary charity
கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதில் பாலியல் தொழிலாளர்களும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகினர்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் பாலியல் தொழிலுக்கு பிரத்தியேக பகுதியை ஒதுக்கிய நிலையில், இங்கு இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக ஒருவேளை உணவிற்கு கூட அல்லாடும் சூழல் ஏற்பட்டது.
இவர்களுக்கு அப்பகுதியை சார்ந்த நல்லுள்ளம் கொண்ட நபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்து வந்தனர். இவர்களின் அன்றாட செலவுகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரத்தை சார்ந்த தொண்டு நிறுவனம் திறன்மேம்பாட்டு பயிற்சியை வழங்குகிறது.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக பாலியல் தொழிலார்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 50 பெண்களுக்கு முகக்கவசம் தைக்கும் பயிற்சி வழங்கப்பட்டு, முகக்கவசம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இது குறித்து பாலியல் தொழிலாளி கூறுகையில், " இந்த இக்கட்டான சூழலில் எதோ ஒருவகையில் எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி. ஆனால் என்னால் இதன்பின்னர் பாலியல் தொழிலாளி கைவிட இயலாது. எனது செலவுகள் அனைத்தையும் மாதம் ரூ.8 ஆயிரம் வருமானத்திற்குள் தக்க வைக்க இயலாது.
எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு நான் பணம் சேர்க்க வேண்டும். வீட்டு வாடகை மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களை நான் கவனித்தாக வேண்டும். இப்போதைக்கு இந்த வருமானத்தை வைத்து பிழைத்து வரவேண்டி இருக்கிறது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Sex workers training to prepare mask due to Lockdown help with Voluntary charity