பாலியல் தொழிலாளிகளுக்கு கொரோனாவால் ஏற்ப்பட்ட சிக்கல்.! ஏக்கத்தில் வாசலில் காத்திருப்பு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸால் அனைத்துத் தொழிலும் முடங்கிப்போய் இருக்கின்றது. ஆனால், எந்த ஒரு தொழிலையும் மாஸ் போட்டுக்கொண்டே சமூக இடைவெளியுடன் செய்து முடிக்க முடியும். பாலியல் தொழிலில் அது சாத்தியமா? வேறு எந்த தொழிலும் தெரியாத பல பாலியல் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. 

ஒரே இரவில் லட்சக்கணக்கில் சம்பாதித்த பெண்கள் தற்போது வெறும் 1000, 500 க்கு கஸ்டமர் வராமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். சிலர் ,ஏற்கனவே பணத்தை சேமித்து வைத்து இருந்ததால் இந்த நேரத்தில் சமாளிக்க முடிகிறது. ஆனால், பலர் அன்றாட தேவைக்கு கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 28 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய 13 வயது டீனேஜ் மகனுக்காக இந்த தொழிலை செய்து வருகிறார். அவரை நகரத்தில் மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைக்கின்றார். 

எனவே, அவனுக்கு செலவுகள் அதிகம் ஆகின்றது. அதனால், இந்த தொழிலை செய்து அவர் சமாளித்து வந்துள்ளார். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸால் வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்துவிட்டனர். மகனுக்காக வேறு ஒரு தொழிலை செய்தார். 

ஆனால், பொருளாதார நெருக்கடியில் எங்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. வேற எந்த தொழிலை செய்தாலும், அவருக்கு வாய்ப்பு இல்லை என்பதால் அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். எனவே, உணவுக்கே வருமானம் போதாமல் அவர் கஷ்டப்படுகின்றனர்.

இந்தியாவிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பல நகரங்களில் இருக்கும் பாலியல் தொழிலாளிகளின் நிலைமையும் இதுதான். இந்த கொரோனவைரஸ் எப்போது ஒழியும் என்று அவர்கள் வாசலில் காத்து கிடக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sex workers affected by corona virus spread 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->