துடிதுடிக்க கொல்லப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி.! அலறி துடிக்கும் மனைவி.!
scientist murder in kerala
கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு இந்திரா என்ற மனைவியும், ஒரு ஆண் ஒரு பெண் பிள்ளையும் இருந்துள்ளது. சுரேஷ் இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். ஹைதராபாத்தில் 20 வருடங்களாக பணியாற்றி வருகின்றார்.
சமீபத்தில் இந்திராவை சென்னைக்கு ட்ரான்ஸ்பர் செய்தனர். இதன்காரணமாக சுரேஷ் தனித்து வசித்து வந்துள்ளார். சுரேஷ் நேற்று அலுவலகத்துக்கு செல்லாததால், உடனிருப்பவர்கள் அவருக்கு போன் செய்து உள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அவருடைய மனைவியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளார்கள்.
இதனால் இந்திராவும் சுரேஷை தொடர்பு கொள்ள முயற்சித்து தோற்றுப் போனார். இதன் காரணமாக பதறி அடித்து இந்திரா ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். அங்கே காவல்துறையின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சுரேஷ் அங்கே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதை கண்ட இந்திரா அலறி துடித்து கத்தியுள்ளார். காவல் துறையினர் அவருடைய சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேஷ் பலமாகத் தாக்கப்பட்டு இருக்கின்றார். ஆனால், எதற்காக கொன்றார்கள் என்பது தெரியவில்லை. சிசிடிவி கேமராக்களை பரிசோதித்து வருகின்றனர். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தால் தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
scientist murder in kerala