கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. குடிகாரனால் சோகம்.. தேசிய நெடுஞ்சாலையில் திமிர் வேகம்.!
Salem National Highway Car Bike Accident Car Driver Sathish Kumar Arrest his Native is Perambalur
கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த அஜித் மற்றும் அருண் ஆகியோர், தங்களின் இருசக்கர வாகனத்தில் பழநிக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். இதன்போது தாறுமாறான வேகத்தில் வந்த ஹூண்டாய் கார் ஒன்று, இருசக்கர வாகனத்திற்கும் - மற்றொரு வாகனத்திற்கும் நடுவில் நுழைய முயன்று சென்றது. இதன்போது, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய கார் தொடர்ந்து அசுர வேகத்தில் பயணம் செய்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண், அஜித் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட வாகன ஓட்டிகள், தங்களின் வாகனத்தை நிறுத்தி அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் பின்னால் வந்த கார் ஒன்றின் கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த சேலம் காவல்துறையினர், மருத்துமனைக்கு விரைந்து சென்று இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், காரின் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. வீடியோவின் அடிப்படையில் கார் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தது என உறுதியாகவே, விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, வாகனத்தை நிறுத்தாமல் சென்றது உறுதியானது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem National Highway Car Bike Accident Car Driver Sathish Kumar Arrest his Native is Perambalur