ஆண் ரவுடியின் மேல் காதல் கொண்ட பெண் தாதா.! திரைப்பட பாணியில் ஒரு காதல் காவியம்.. யுத்தத்தில் முடிந்தது.!  - Seithipunal
Seithipunal


ஒரே பகுதியில் இருக்கும் ரவுடிகளுக்குள் பல்வேறு விதமான மோதல் ஏற்பட்டு பார்த்திருக்கின்றோம். ஆனால், குஜராத்தில் ஒரு ரவுடிக்கு மற்றொரு ரவுடி மேல் காதல் ஏற்பட்டதால் மோதலில் முடிந்திருக்கின்றது அந்த சம்பவம்.

குஜராத் மாநிலம், சூரத்தில் 22 வயதான அஸ்மிதாபா கோஹில் என்ற லேடி டான் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருக்கின்றன. அவருக்கு அங்கிருக்கும் கடைக்காரர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் கப்பம் கட்டி வருகின்றனர். என்ன தான் அவர் தாதாவாக இருந்தாலும் கூட, அவரும் பெண் தானே? அவருக்கும் காதல் உணர்வுகள் என்று அனைத்தும் இருக்கும் அல்லவா? 

அவர் சஞ்சய் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரும் ஒரு கேங்ஸ்டர் தான். இருவரின் காதலும் அந்த பகுதி முழுவதும் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில், லேடி டான் சஞ்சயின் நண்பராக இருக்கும் ராகுல் என்பவர் மீது காதல் கொண்டுள்ளார். இருவரும் சஞ்சய்க்கு தெரியாமல் ஒன்றாக வெளியில் சுற்றித் திரிந்த வந்துள்ளனர். 

ஒருநாள் இந்த விஷயம் சஞ்சய்க்கு தெரியவந்துள்ளது. இதனால், மிகவும் ஆத்திரம் அடைந்த சஞ்சய் நேரடியாக லேடி தாதாவை நடுரோட்டில் வைத்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்துள்ளார். மேலும், அவருடைய வாகனங்கள், பொருட்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கின்றார்.

அவருடைய வீட்டு கதவை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்த லேடி டான் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். பின்னர், ராகுலின் வீட்டுக்கு சென்று அவர் ஒளிந்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy women attacked by her boy friend 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->