துப்பாக்கி சூடு நடத்தி நகைக்கடையில் கொள்ளை.! ஊழியர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்.!
ROBBERY IN JEWEL SHOP
நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நகைக்கடையில் ஆயுதங்களுடன் புகுந்த திருடர்கள், நகை கடையில் இருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார் , மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நகை கடையில் இருந்த 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கபட்டதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் மேற்கண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.