தங்கத்தை கடத்தி வர வித்தியாசமான முயற்சி..! சுங்கத்துறையினர் சுளுக்கெடுத்ததால் கதறல்.!! - Seithipunal
Seithipunal


ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம், கொச்சி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது. அந்த விமானத்தில் நௌஷத் என்ற இளைஞர் ஒருவர் பயணம் செய்தார். சுங்கத்துறையினர் வழக்கம் போல அனைத்துப் பயணிகளிடமும் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின் போது நௌஷத் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் நௌஷத்தை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார். அப்போது நௌஷத் 1.25 கிலோ எடை உள்ள தங்கத்தைத் தலையில் மறைத்து வந்திருந்தது தெரிந்தது. உச்சந்தலையில் உள்ள முடியை ஷேவ் செய்து விட்டு அங்குத் தங்கத்தை வைத்து விட்டு அதை விக் மூலமாக மறைத்து நௌஷத் எடுத்து வந்திருப்பது தெரிந்தது.

இதை தொடர்ந்து, நௌஷத் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கமாகத் திரைப்படத் துறையினர் இது போல் சம்பவம் நடந்தால் அதை தங்கள் திரைப்படங்களில் பயன் படுத்துவார்கள். ஆனால் இப்படி ஒரு சம்பவம் சூர்யா நடித்த அயன் படத்தில் வந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. அந்தப் படத்தில் அவர் தனது விக்கில் வைரத்தை கடத்தி வந்திருப்பார்.

திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in cinematic method in kochin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->