இளம்பெண்ணை ஏமாற்றி பேரம் பேசி விற்பனை செய்த காமுக கும்பல்.. பரிதவித்த பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் பகுதியை சார்ந்த நபர், பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்து வந்துள்ளான். பின்னர் பெண்ணை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளான். இந்த பெண்மணி, பல நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களும் பலமுறை பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சம்பவத்தன்று ஒரு இளைஞன் உட்பட மூன்று பேர் பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். 

அங்கு மூவரும் பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், பெண் இவர்களின் பிடியில் இருந்து தப்பி உத்திரபிரதேசம் மாநிலத்திற்குள் வந்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினரை சந்தித்து தனக்கு நடந்ததை கூறி கதறியழுதுள்ளார்.

பெண்ணிற்கு தேவையான உதவியை செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளயில், 22 வயதான பெண்மணியை, 53 வயது நந்தலால் யாதவ் என்ற நபருக்கு ரூ.ஒன்றை இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், இளம்பெண்ணின் பக்கத்து வீட்டு நபர்களான ஹாதேவ் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கணவன், மனைவியாக இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan girl cheated and abused by gang like forced prostitution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->