பேருந்துக்குள் மழை, குடைபிடித்தபடி பயணம்,மக்கள் கடும் அவதி.!
rain inside bus in kanyakumari
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில், அரசு பேருந்தின் மேற்கூரையின் உள்ளே புகுந்து பேருந்துக்குள் கொட்டிய மழை நீரில், குடைபிடித்தபடி பேருந்தில் பயணம் செய்து வந்தார்கள்.
திருவட்டாறு பணிமனையிலிருந்து குலசேகரம்- குளச்சல் வழியில், பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது, அப்போது திடீரென மழை பெய்தது.
இதில் மேற்கூரையிலிருந்த ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே புகுந்து இருக்கைகளை நனைத்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான பயணிகள், ஓரமாக நின்றபடியும், குடை பிடித்துக்கொண்டும் பயணம் செய்தார்கள்.
இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஓட்டை உடைசலான பேருந்துகளை அரசு பயன்பாட்டிலிருந்து நீக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
English Summary
rain inside bus in kanyakumari