என் இதயமே நொறுங்கிவிட்டது.. ராகுல் காந்தி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நபர்கள் வருமானம் இல்லாததால் சொந்த மாநிலத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில், பல விபத்துகளும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கான்ப்ரன்ஸ் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இதயத்தை நொறுக்கும் அளவிற்கு பல கொடூரங்கள் நடந்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக நிதிஉதவி வழங்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்கள் நிதியுதவியை பெரும்பாலும் எதிர்பார்த்து இருக்கின்றனர், அவர்கள் கடனை எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும். உணவுகள் மற்றும் வருமானம் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றனர். இது பெரும் வேதனையை தனக்கு அளிக்கிறது என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi speech about finance announcement and migrate workers accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->