மீண்டும் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவரா?! வெளியான தகவலால் பரபரப்பு.!
ragul ganthi again head of congress
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மணல்மேடு வீதியில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, அந்த பொழுக்குழுக்கூட்டத்தில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி ஆக வேண்டும் என்றும், தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டாரம், பேரூராட்சி, ஊராட்சி அளவில் உடனடியாக உறுப்பினர் சேர்க்கையை துவக்கி அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், செப்டம்பர் மாதம் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை சட்டமன்றத்தின் பூத் கமிட்டியை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள கே.எஸ்.அழகிரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பது.
அதுதான், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை அரசு விரைந்து முடிக்க வேண்டும். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தியாகி ஈஸ்வரனுக்கு ஏதாவது வெண்கல சிலை அமைக்க வேண்டும் எனவும், மேலும், மத்திய அரசின் மும்முனை கல்வி முறையை ரத்து செய்து இருமொழி கல்வி தொடர வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
English Summary
ragul ganthi again head of congress