கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு.. அலறிய தொழிலாளி! பதறவைக்கும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் புவனசந்திரன். இவர் தோட்டவேலை செய்து வருகிறார். நெய்யாறு அணை பகுதியில் உள்ள ஒரு கல்லூரி தோட்டத்தில் புதர்களை அகற்றும் பணிக்கு புவனசந்திரன் நேற்று முன் தினம் சென்றுள்ளார்.

தோட்டத்தில் புதர்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் சக தொழிலாளிகளுடன் புதர்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். புதரை அகற்றியபோது அங்கு மலை பாம்பு ஒன்று இருப்பதை புவனசந்திரன் கண்டார். சக தொழிலாளியை அழைத்து அந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர்.

இதற்காக சாக்குப்பை ஒன்றை எடுத்துக்கொண்டு புதருக்குள் நுழைந்து பாம்பை பிடித்தார். அந்த பாம்பை சாக்குப்பைக்குள் போட்டு அதை தோளில் தூக்கிவந்தார். அப்போது சாக்குப்பையில் இருந்த பாம்பு திடீரென வெளியே வந்து புவனசந்திரனின் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டது.

இதனால் புவனசந்திரன் அலறினார். கழுத்தில் சுற்றிய பாம்பை அகற்ற முயன்றார். அதற்குள் சக ஊழியர்களும் ஓடி வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி கழுத்தை சுற்றிய பாம்பை அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

python around the neck


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->