புதுகோட்டை மணிகண்டன் போட்ட பேஸ்புக் பதிவு! தலையில் தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக, மூன்று பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதநதிர தின விழாவின் போது, புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவன் தனது முகநூல் பக்கத்தில், தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளேன்.

மேலும், இந்திய சுதந்திர தின விழாவைப் புறக்கணிப்போம் என்ற வாசகத்தையும் அந்த முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளான். மணிகண்டனின் இந்த முக்கண்ணோல் பதிவு குறித்து, காமராஜ் என்பவர் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் மணிகண்டன் மீது சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai young man arrested for fb post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->