புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.! போராட்டம் வாபஸ்.!!
puthuchery protest
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, மாநிலத்தில் உள்ள 18 சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டம் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஏப்.1-ம் தேதி ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வந்த சொசைட்டி கல்லூரி பேராசியர்கள், ஊழியர்கள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, மாநிலத்தில் உள்ள 18 சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஏப்.1-ம் தேதி ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி பல்கலை மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அல்லாத தேர்வுத்துறை பொறுப்பாளர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு சம்பளத்தை உயர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.