மிரட்டல், ஊழல்! ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா, புதிய அமைச்சர் பதவியேற்பு!
Punjab Minister resign and new minister
ஊழல் புகாரின் பஞ்சாப் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சராக பல்பீர் சிங் இன்றே பொறுப்பேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் பகவந்த் மான் அமைச்சரவையில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருந்த ஃபௌஜா சிங் சராரி இன்று காலை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்தார்.
ஆனால், சில நாள்களுக்கு முன், ஒப்பந்ததாரர்களை மிரட்டி அமைச்சர் ஃபெளஜா சிங் பணம் கேட்கும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த ஊழல் புகார் காரணமாகவே அவர் ராஜிநாமா செய்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் ஆணித்தரமாக பேசப்படுகிறது.
இந்நிலையில், தோட்டக்கலைத்துறை புதிய அமைச்சராக பல்பீர் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் முன்னிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிந்த் பல்பீர் சிங்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
English Summary
Punjab Minister resign and new minister