வெளிநாட்டு மோகம்.. மகளை பறிகொடுத்த குடும்பம்.! கனடாவில் இறந்த இந்திய இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பலரும் தங்கள் மகன் மற்றும் மகளை கனடாவுக்கு அனுப்புவதை ஒரு கனவாகவே கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேவிந்தர் சிங் என்ற நபர் அவரது மகளை கனடாவிற்கு அனுப்பிவிட்டு அதன் பின் குடும்பமே கனடாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேவிந்தர் சிங்கின் மகள் பவன் பிரீத் கவுர் என்ற 21 வயது பெண் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் நிலையம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை அவசர உதவி குழுவினர் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். 

ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். அவரை சுட்டுக் கொன்ற நபர் அங்கிருந்து நடந்தே தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அந்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு அவரை கண்டறிய உதவுமாறு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கனடாவில் வாழ வேண்டும் என்ற ஆசையில் தங்கள் மகளை இழந்த அந்த குடும்பத்தினர் தற்போது கண்ணீருடன் மகளது புகைப்படத்தை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab Girl died In Canada


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->