சர்ச்சையை ஏற்படுத்திய பாதிரியார்..!! லவ் ஜிகாத் பற்றிய கருத்துக்கு கொந்தளிக்கு இஸ்லாமிய அமைப்புகள்..!!
Priest who made a controversial comment about Love Jihad
கேரளாவில் நார்கொடிக் ஜிகாத் மூலம் இளைஞர்களை மதமாற்றம் செய்து வருவதாக கேரள பாதிரியார் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சைரோ மலபார் கத்தோலிக்க பேராலயத்தின் பாதிரியாரான ஜோசப் கல்லரங்கட் என்பவர் சமீபத்தி பேசிய போது, கேரள இளைஞர்கள் லவ்ஜிகாத், மற்றும் நார்கொடிக் ஜிகாத் போன்ற நெருக்கடியை சந்தித்துள்ளர்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நசுக்க இளைஞர்களை நார்கொடிக் ஜிகாத்தில் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பெண்களை லவ்ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்துள்ளனர் என கூறியிருந்தார்.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ஸாமிய அமைப்புகள் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறன. இதுகுறித்து கருத்து தெரிவித்த பினராயி விஜயன் நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற புது வார்த்தையை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
போதைப் பொருளால் ஒரு மதத்துக்கு மட்டும் பாதிப்பு கிடையாது, அது சமூகத்தையே சீரழிக்கிறது. இதற்கு மதசாயம் பூசுவது கண்டிக்கதக்கது. பொறுப்பான மனிதர்கள் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
English Summary
Priest who made a controversial comment about Love Jihad