பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை கண்காணிப்பாளர் கைது..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை பகுதியை சார்ந்த பெண்மணி காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கரோனா கண்காணிப்பு பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்ற நிலையில், இவருக்கு ஐ.ஆர்.பி.என் (India Reserve Battalion) என்று அழைக்கப்படும் புதுச்சேரி காவல் துணை கண்காணிப்பாளர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

மேலும், ஆபாசமாகவும் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதில் பெண் காவல் அதிகாரியிடம் ஆபாசமாக பேசியது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, காவல் துறையினர் பெண் காவல் அதிகாரியின் புகாரில் பெயரில் காவல் துணை கண்காணிப்பாளரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondichery IRBN police assistant commissioner arrest sexual torture lady cop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->