சுற்றுச்சுவர் தகராறு.. சட்டையைப்பிடித்து, கட்டிஉருண்டு அடிதடி சண்டை.. அட்ராஸிட்டி சம்பவங்கள்.!!
Pondichery fight with two men police arrest and investigation
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிருமாம்பாக்கம் பனித்திட்டு பகுதியை சார்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவியின் பெயர் மல்லிகா. இவரது பக்கத்து வீட்டில் நீதிமன்ற உதவியாளரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பான பிரச்சனையானது இருந்து வந்துள்ளது. மேலும், தனது இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட கூடாது என்று மல்லிகா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மல்லிகாவிற்கும், கணேசனிற்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், மல்லிகாவின் மருமகன் ஏழுமலை (வயது 48) பிரச்சனையை சமாதானம் செய்யும் நோக்கில் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஆத்திரத்தில் முடிந்து. கணேசனிற்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், இருவரும் ஆபாச வார்த்தைகளால் தங்களுக்குள் போட்டிபோட்டு திட்டிக்கொண்டு இருந்த நிலையில், கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டுள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் இருவரும் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகினர். சிகிச்சை முடிந்ததும் இருவரும் தனித்தனியே சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondichery fight with two men police arrest and investigation