காதலியுடன் தகராறு.. கடலை போட சென்ற இடத்தில், கடலலையில் விபரீத முடிவு..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் காணுவப்பேட்டை பகுதியை சார்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 40). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜா (வயது 19). இவர் கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் இல்லத்திற்கு திரும்பவில்லை. 

இதனால் பெரும் கவலைக்கு உள்ளான குடும்பத்தினர், பல இடங்களில் அவரை தேடியும் காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில், ராஜாவின் இருசக்கர வாகனம் அங்குள்ள அரியாங்குப்பம் அருகேயுள்ள சின்ன வீரணாம்பட்டினம் கடற்கரை பகுதியில் இருப்பதாக பன்னீர் செல்வத்திற்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பன்னீர் செல்வம், தனது மகனின் இருசக்கர வாகனம் என்பதை உறுதி செய்த நிலையில், கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் உடலை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், சின்னவீராம்பட்டினம் பகுதியில் வாலிபரின் உடல் கரையொதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு செல்கையில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது தெரியவந்துள்ளது. ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், காவல் துறையினரின் விசாரணையில் சம்பவத்தன்று ராஜா மற்றும் அவரது காதலி கடற்கரைக்கு வந்த நிலையில், நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கடலில் குதித்து ராஜா உயிரை மாய்த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Youngster Attempt suicide due to Love fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->