பகலில் காதல் ஜோடி போல நோட்டம்.. இரவில் அட்டூழியம்.. திருட்டு கும்பலின் பகீர் வேலை.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தொடர் புகார் எழுந்தது. 

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சென்னையை சேர்ந்த பிரபல கொள்ளையன் சுரேஷ் என்பவனை கைது செய்துள்ளனர். மேலும், அவனிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நோட்டமிட்டு இரவு வேளைகளில் கைவரிசை காண்பித்து வந்தது அம்பலமாகியது. இதனைப் போன்று லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் நடந்த கொள்கைகளுக்கும் சுரேஷிற்கும் தொடர்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த கொலைச் சம்பவங்களில் சுரேஷிற்கு உடைந்தையாக இருந்த அவரது கூட்டாளி ஸ்ரீதர் மற்றும் சுரேஷின் காதலி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுரேஷ் கொடுத்த 18 பவுன் நகையை மீட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Thief arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->