பதிலுக்கு பதில்.. கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் மீது வாசகம்.. காவல்துறை விசாரணை.!
Pondicherry Rowdy Madhan Murder Friends Make Decision Revenge Police Investigation about Video Proof
வில்லியனூர் அருகே கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் முன்னிலையில், பதில் சம்பவம் தொடரும் என்று சபதம் எடுத்துக் கொண்டதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மதன் (வயது 20). 20 வயதாகும் மதன் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த நிலையில், மதன் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் விழுப்புரத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் மதனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த வியாழனன்று மதனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில், மதனின் உடலில் "பதில் சம்பவம் தொடரும்" என துணியால் எழுதி வைக்கப்பட்டு இருந்த வாசகங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக வில்லியனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரச்சனையை தூண்டும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondicherry Rowdy Madhan Murder Friends Make Decision Revenge Police Investigation about Video Proof