மூதாட்டி எடுத்த விபரீத முடிவு.. சுதாரிப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி.. குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


கடற்கரையில் தற்கொலைக்கு முயற்சி செய்த மூதாட்டியை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி மீட்டு காப்பாற்றியுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் கடற்கரை சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடலில் இறங்கி மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், சுதாரித்துக்கொண்டு கடலுக்குள் குதித்து மூதாட்டியை மீட்டு வெளியே இழுத்து வந்துள்ளார்.

கடல் நீரினை குடித்த காரணத்தால் மூதாட்டி மயக்கமடைவே, அவரை தூக்கிக்கொண்டு வந்து விரைந்து மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அங்கு சிகிச்சைகள் முடிந்து உயிர் பிழைத்துக்கொள்ளவே, அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தருமாபுரி பகுதியை சார்ந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது தெரியவந்தது. அவருக்கு அறிவுரை வழங்கி காவல் துறையினர், அவரை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தனர். காவல் அதிகாரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry old lady rescued by police when attempt by suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->