கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராதா? இன்னும் இவ்வளோ இருக்கா?!! - புதுவை எம்.எல்.ஏ!!
pondicherry mla about coorna virus
சீனாவில் தொடங்கி உலக நாடுகளின் தலைவிரித்தாடும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஓமனில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
தற்போது, அவர் அதில் இருந்து குணம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில், புதுவை மாநிலத்தின் எம்எல்ஏ கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
புதுவை மாநிலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஜெயராம் திருமண மண்டபத்தில் அரசு நடத்திய மகளிர் தின விழா நடைபெற்றது. அப்போது ஜான்குமார் எம்எல்ஏ வாழ்த்திப் பேசினார். அதில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த நிலையில் வைரஸை தடுக்க எளிய வழிமுறைகள் பின்பற்றினால் போதும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் காட்டு நெல்லிக்காய், சின்ன வெங்காயம், கொடுக்காப்புளி, பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பழங்கள் சாப்பிட்டுவதாலும், பழைய-சோறு சாப்பிடுவதாலும் கொரோனா வராமல் இருப்பது மட்டுமல்லாமல் மரணம் கூட நம்மை நெருங்காது என்றும், காலை மற்றும் மாலை தினந்தோறும் வெயிலில் நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்
English Summary
pondicherry mla about coorna virus