மன அழுத்தத்தால் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
Pondicherry MBBS College Student Jothika Suicide and Died 19 Feb 2021
வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தர்மாபுரி பகுதியை சார்ந்தவர் புதுப்பட்டான். இவரது மனைவி அனிதா. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் ஜோதிகா (வயது 20). இவர் அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார்.
கடந்த சில வருடமாக தீவிர மனஅழுத்த பிரச்சனை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை இவர்களின் வீட்டில் ஆட்கள் இல்லை. இதன்போது, தனியாக இருந்த மாணவி ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக இருப்பதைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் ஜோதிகா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondicherry MBBS College Student Jothika Suicide and Died 19 Feb 2021