சின்ன சண்டையில் விளையாடிய விதி.. பாசத்தால் அரங்கேறிய பரிதவிப்பு மரணம்.!!
Pondicherry Husband wife suicide due to crazy fight
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் மன்னடிபட்டு பகுதியை சார்ந்தவர் கனகராஜ் (வயது 36). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சபீதா. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவது இயல்பாக இருந்த நிலையில், நேற்று காலை கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் போது சபிதாவை கனகராஜ் திட்டியதாக தெரியவருகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான சபீதா, விஷம் அருந்தி வீட்டில் தற்கொலை முயற்சி செய்து மயக்க நிலையில் இருந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சபீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி கனகராஜும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில், கனகராஜ் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கதிர்காமம் மருத்துவமனையில் சபிதாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து, அவரின் உயிரை காப்பாற்றிய நிலையில், கனகராஜ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondicherry Husband wife suicide due to crazy fight