பள்ளி தோழிகளுக்காக மாணவி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
Pondicherry girl Suicide 27 April 2021
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூலக்குளம் சாலைத்தெரு பகுதியை சார்ந்தவர் ஜான் பிராஸ்வா (வயது 50). இவரது மனைவி ஜெனிதா மேரி. இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 16 வயதுடைய இஸபெல்ஜிஸ்தின் என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக மகளை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது தோழிகள் படிக்கும் மற்றொரு பள்ளியில் படிக்கும் நிலையில், தன்னை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முடிவு செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. தனது விருப்பத்தை வீட்டில் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட இஸபெல்ஜிஸ்தின், தனது தாய் தந்தை வேலைக்கு சென்ற சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இஸபெல்ஜிஸ்தினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry girl Suicide 27 April 2021