துணை நடிகைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. பகீர் தகவல்.!!
Pondicherry gang forced prostitution Chennai cine actress police arrest gang
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவன் சந்துருஜி. இவன் போலியான ஏ.டி.எம் கார்டுகளை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக புகார் எழுந்து கைதாகி சிறையில் இருந்துள்ளான். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், இவன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள விடுதியை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். மேலும், இதனைப்போன்று தந்திராயன் குப்பம் விருந்தினர் மாளிகையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விடுதிக்குள் மறைமுகமாக ஸ்பா இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஸ்பாவில் இரண்டு பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த பெண்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை சார்ந்த துணை நடிகைகள் என்பதும், புதுச்சேரியில் பியூட்டி பார்லர் தொழில் கற்று தருவதாக கூறி அழைத்து வந்து, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் சந்துருவை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சந்துருவின் நண்பர் விஜயகுமார், காவலாளி அணில் ஜோசப் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் சந்துருவின் மகன் உமா சங்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கட்டிடங்களையும் காவல் துறையினர் சீல் வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondicherry gang forced prostitution Chennai cine actress police arrest gang