எங்களுக்கு துரோகம் செய்தவரெல்லாம் நடுத்தெருவில் நிற்பார்கள் - நாராயணசாமி பரபரப்பு பேட்டி.!
Pondicherry Former CM Narayanasamy Speech 2 August 2021
காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் தொகுதி சுப்பையா நகரில், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தியின் நினைவேந்தல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் உரையாற்றுகையில், " நடந்து முடிந்த 2021 புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தனர். மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு கிடைத்துவிடும். பஞ்சாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள், மாநில கடனை தள்ளுபடி செய்வார்கள் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அப்படி எதுவும் தற்போது வரை நடக்கவில்லை. தற்போதைய ஆட்சி கோமா நிலையில் இருந்து வருகிறது. புதுச்சேரிக்கு புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவது முக்கியம் கிடையாது. மக்களுக்கான நலத்திட்டங்கள் வேண்டும். கடந்த ஆட்சியில் பல எதிர்ப்புகளை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சென்றவர்கள் காணாமல் போய்விடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியை சார்ந்த முன்னாள் சபாநாயகர், ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலரும் காணாமல் போய்விட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதன் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் இருப்பார்கள் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry Former CM Narayanasamy Speech 2 August 2021