நாடகக்காதல் தொல்லை.. கொதிக்கும் எண்ணெய்.. சிறுமியின் கை, முகமெல்லாம் கொப்புளங்கள்.. புதுச்சேரியில் பயங்கரம்.!!
Pondicherry child girl love torture police arrest culprit
இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் பகுதியை சார்ந்தவன் மாதேஷ் (வயது 19). இதே பகுதியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை மாதேஷ் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளான்.
இந்நிலையில், சிறுமியிடம் காமுகன் பலமுறை காதலை வெளிப்படுத்திய நிலையில், சிறுமி காமுகனின் நாடககாதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பெற்றோரிடமும் சிறுமி விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காமுகன் சிறுமியை பழிவாங்கும் பொருட்டு, இரவு வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் வீட்டு ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டு தப்பி சென்றுள்ளான்.
இதனால் சிறுமியின் கழுத்து, முகம், கை பகுதிகளில் கொப்பளம் ஏற்பட்டு வலியால் அலறி துடிக்கவே, சிறுமியை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாடகக்கத்தால் காமுகன் மாதேஷை கைது செய்தனர். மேலும், அவனிடம் மேற்கொண்ட விசாரணியில், சிறுமியின் மீது எண்ணெயை ஊற்றியதை ஒப்புக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pondicherry child girl love torture police arrest culprit