பாத்ரூமில் பெண் போலிஸ் செய்த காரியம்.! திறந்த பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
Police women suicide in her home
இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பு மனிதர்களும், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதுவும் பெண் காவல் அதிகாரிகளுக்கு சொல்லவே வேண்டாம். இப்படித்தான் பெண் காவலர் ஒருவருக்கு உயர் அதிகாரியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.
பரூல் என்ற பெண் போலீஸ் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு கௌதம புத்த நகரில் வசித்து வந்துள்ளார். அப்போது, அந்த பெண் போலீசுக்கு அவருடைய மேல் அதிகாரியால் வேலையில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இதனால், அவருக்கு அதிகாரியிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீங்கள் தினமும் மூன்று மணி நேரம் தான் பணி செய்வதாகவும், சக ஊழியர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. ஏன் பணியை ஒழுங்காக செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது.
இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, திங்கள்கிழமை தன்னுடைய வீட்டில் குழந்தையை கணவரிடம் விட்டுவிட்டு பாத்ரூமிற்கு சென்றுள்ளார். பாத்ரூமிற்கு சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததால் அவருடைய கணவர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Police women suicide in her home