ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை.. பத்திரமாக மீட்ட காவல்துறையினர்..!
Police rescue the baby
ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள தம்பதி ஒருவர் தனது ஆண் குழந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குழந்தை கடைசியாக அவரது அத்தை வீட்டில் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை பீகாரை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை 1.30லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த அத்தை மற்றும் குழந்தையை ரூ.1.30 லட்சத்திற்கு வாங்கிய பெண்ணும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.