இந்தியாவில் முதல்முறையாக போலீசார் திடீர் போராட்டம்.. உச்சகட்ட பரபரப்பில் உயர் அதிகாரிகள்!! - Seithipunal
Seithipunal


கடந்த சனிக்கிழமை திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்கள் எரிக்கப்பட்டது.

நேற்றும் கர்கர்டூமா நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டிலேயே முதன்முறையாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police protest in delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->