லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதனையொட்டி டெல்லியில் மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பின்பு பேசிய பிரதமர் மோடி, இன்று பாதுகாப்புத் துறையில் நாம் சுயசார்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், மோசடிகளுக்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஊழல் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள் ஒரு பணி முறையில் விரைவாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது சேவையை கட்டியெழுப்புவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளுடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் இணைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Launches Central Vigilance Commission New Complaint Management System Portal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->