கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த ப்ளம்பர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பிளம்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் ப்ளமர் வேலை செய்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் கழிவுநீர் தொட்டியில் பைப்புகளை மாற்று சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டி உள்ளே விழுந்துள்ளார். இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அது முடியாமல் போகவே உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் உள்ள நீரை வெளியேற்றி ரமேஷின் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plumber dies after falling into sewage tank


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->